Posted by: jason statham on: July 16, 2009
| திருநெல்வேலி : உண்ணாவிரதம் இருந்த மருத்துவ மாணவர்கள் நான்கு பேர் மயக்கமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க வலியுறுத்தி நெல்லை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் கடந்த மூன்று நாட்களாக ஆஸ்பத்திரி வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களில் நான்கு பேர் மயக்கமடைந்தனர். மயக்கமுற்ற சுந்தரவடிவேல், ஜோசப் செல்வசிங், ஜான் சாந்த வினோதன், நித்யானந்தம் ஆகியோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கார்த்திகேயன் தலைமையில் மற்ற நான்கு மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். சித்த மருத்துவ பயிற்சி மாணவ டாக்டர்களுக்கும் உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பாளையங்கோட்டையில் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அருள்முருகன் தலைமையில் 40 மாணவிகள் உள்பட 70 பேர் இதில் பங்கேற்றனர். |
Albeo theme by Design Disease
Recent Comments